தைவான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

Taiwan Earthquake

Taiwan Earthquake: தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வந்துள்ளது. தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 143 க்கும் மேற்பட்ட நபர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தீவு நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் (CNA) தெரிவித்துள்ளது. இதுவரை கிடைத்த தரவுகளின்படி, உயிரிழந்த ஒன்பது பேரில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர். தைவான் தலைநகர் தைபேயில் நேற்று அதிகாலை 7.4 … Read more

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு!

JAPAN earthquake

Earthquake : ஜப்பானியில் இரண்டாவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியையை பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அந்நாட்டின் தலைநகரான தைப்பேவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 9 பேர் உயிரிழந்த நிலையில், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதுமட்டுமில்லாமல், தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட … Read more

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்.!

earthquake

ஆப்கானிஸ்தானில் இன்று (பிப்ரவரி 9ம் தேதி) அதிகாலையில், 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நடுக்கம் மிதமான தீவிரத்துடன் இருந்தபோதிலும், வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு நகரமான ஃபைசாபாத் நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தெற்கு-தென்கிழக்கே இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. விமான ஊழியர்கள் திடீர் போராட்டம்..! பயணிகள் தவிப்பு..! இந்த ஆண்டு … Read more

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வுகள்!

earthquake

நேற்று (ஜனவரி 23) திங்கள்கிழமை இரவு சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் என்னென்ன என்பது குறித்த அந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ரிக்டர் அளவில் 7.2-ல் ஏற்பட்ட இந்த பயங்கரமான நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. … Read more

ஆப்கானிஸ்தானில் 6.1 அளவில் நிலநடுக்கம்…டெல்லியில் லேசான அதிர்வு.!

earthquake delhi

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6. 1 ஆக பதிவாகியுள்ளது. இதனால், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தேசிய நில அதிர்வு மையத்தின் படி,  6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானுக்கு அருகில் ஏற்பட்டதாகவும், பிற்பகல் 2.50 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்வேன் – எடப்பாடி பழனிசாமி மேலும், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பூஞ்ச் … Read more

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Japan earthquake

ஜப்பான் நாட்டில் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது. இது ஜப்பானிய மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையும், … Read more

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு!

Japan earthquake

ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று முன் தினம் (புத்தாண்டு தினத்தன்று) ஒரே நாளில் மட்டும் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்நாட்டை உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் மத்திய ஜப்பானை கடுமையாக தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வீடுகள், கட்டடங்கள் குலுங்கி தரைமட்டமாகும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. தற்பொழுது, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, ஜப்பானின் மேற்கு பகுதியில் … Read more

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் … Read more

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்… இதுவரை 48 உயிரிழப்பு!

Japan earthquake

ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்நாட்டை உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் மத்திய ஜப்பானை கடுமையாக தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வீடுகள், கட்டடங்கள் குலுங்கி தரைமட்டமாகும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக, நேற்று ஜப்பானின் மேற்கு பகுதியில் அதிகபட்சமாக 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடலோர பகுதி நகரங்களில் உள்ள மக்களை … Read more

ஜப்பான் நிலநடுக்கம்: 155 அதிர்வுகள்.. பெரும் சேதம்.. ஏராளமான உயிரிழப்புகள் – அந்நாட்டு பிரதமர் பேச்சு!

Fumio Kishida

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். ஜப்பான் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு மேல் 30க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில், குறிப்பாக 7.6 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது என அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே சுமார் 15 கிமீ … Read more