ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.! அமைச்சர் சக்கரபாணி தகவல்.! 

22% சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது. என அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் தற்போது பருவமழைக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழை பெய்து வந்த காரணத்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியவில்லை. இதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 17 சதவீத … Read more

ஊட்டச்சத்து குறைபாடு – அரசு முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறது. அதன்படி,டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொள்கிறார். குறிப்பாக,இந்த கூட்டத்தில் உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

‘காலம் எவ்வளவு வேகமாக கடக்கிறது’ – ஊர் மக்களுடன் இணைந்து நடனமாடிய அமைச்சர் சக்கரபாணி…!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடனமாடிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் வேலுசாமி உடன் இணைந்து அமைச்சர் சக்கரபாணி நடனம் ஆடினார். கிராம மக்களின் அன்பு கோரிக்கையை ஏற்று இருவரும் டான்ஸ் ஆடி திருவிழாவில் கலந்து கொண்டவர்களை மகிழ்வித்தனர். இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தனது ட்விட்டர் … Read more

நாளை திண்டுக்கல் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்கள், நாளை திண்டுக்கல் பயணம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்கள், நாளை திண்டுக்கல் பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் சக்கரபாணி முதல்வரை வரவேற்று ட்வீட். செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு … Read more

#BREAKING : ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் – அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் தொகுப்பில் ஊழல், தரமற்ற பொருட்களை வழங்கியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்பட்டமான பொய் கூறுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற பொருள்களின் அளவு குறைந்தும், தரமற்றதாகவும் விநியோகிக்கப்பட்டது. சுமார் ரூ.1,300 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு இருந்த … Read more

#BREAKING : பொங்கல் தொகுப்பு குறித்து புகார் எழுந்த நிலையில் முதல்வர் நாளை ஆலோசனை..!

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும், ரூ.1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு  பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 95 சதவிகித மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொங்கல் பரிசு … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் பொருட்களா? – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

திருவாரூர்:கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,தற்போது கொரோனா பரவல் முன்பை விட ஓரளவுக்கு குறைந்துள்ளது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வேளையில்,தமிழகத்தில் இனி கொரோனா … Read more

“முதல்வரே…அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் இது”- ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

‘அம்மா உணவகம்’ என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு ‘கலைஞர் உணவகம்’ என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று ஓபிஎஸ் குற்றச்சாட்டு. வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நேற்று கூறியது, “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் … Read more

#Breaking:தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் போன்று கூடுதலாக “500 கலைஞர் உணவகங்கள்” விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அறிவித்துள்ளார். ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் மத்திய அமைச்சர் … Read more

ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.  கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ் குமார் அவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிக மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதனை அடுத்து இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 … Read more