அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக வாரிசுக் கட்சி – ஈபிஎஸ்..!

Edappadi Palaniswami

நாமக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின்  பூத்  கமிட்டி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  பேசினார். அப்போது” நாமக்கல்லை அதிமுகவின் கோட்டையாக மாற்றியவர் தங்கமணி, இன்றைய முதலமைச்சர் அதிமுக மீது வீண் பழி சுமத்திக் கொண்டிருக்கிறார். சாதனைகளை வலைதளம் வாயிலாக கொண்டு சேர்ப்பது ஐ.டி.விங்கின் கடமை. மரணஅடி கொடுக்கும் விதமாக அதிமுக ஐ.டி.விங் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். அதிமுகவில் தான் ஒரு கிளைச் செயலாளர் முதலமைச்சராக முடியும், அதிமுகதான் ஜனநாயகக் கட்சி; திமுக … Read more

கொடநாடு வழக்கு – ஈபிஎஸ் சாட்சியப்பதிவு தாக்கல்..!

EPS

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க கோரியும் ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் தனது சாட்சியத்தை பதிவு செய்ய உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருவதற்கு பதிலாக … Read more

எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை..!

சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மாறியதை செலுத்தி, உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

வாரி வாரிக் கொடுத்த வள்ளல் – ஈபிஎஸ் ட்வீட்

எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி என ஈபிஎஸ்  ட்வீட்.  இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி, எம் … Read more

வெளிநாட்டு சிகிச்சைகள் வேண்டாம் என ஜெயலலிதா தான் மறுத்தார்.! சசிகலா பேட்டி.!

ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக சசிகலா பேட்டி.  சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின் சசிகலா செய்தி அவர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  வெளிநாட்டு மருத்துவர்கள் அவருக்கு வந்து சிகிச்சை அளித்த நிலையில், ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ஜெயலலிதா சென்னையே மருத்துவ தலைநகரம் தான், அதனால் வெளிநாடு … Read more

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும்..! இபிஎஸ்-க்கு சவால் விட்ட ஓபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி நடத்தட்டும் பார்க்கலாம் என சவால் விட்ட ஓபிஎஸ். சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் சோதனை காலகட்டத்தில் எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி. நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். கட்சியின் … Read more

உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த ஈபிஎஸ்..!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவை ஈபிஎஸ் புறக்கணித்துள்ளார்.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இந்த நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதவியேற்பு விழாவில் ஈபிஎஸ் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் 14 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு.  திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்காலர் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இந்த போராட்டம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சை, விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, … Read more

‘குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம்’- அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு..!

எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில், அதிமுகவினர் உறுதி … Read more

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்..! ஈபிஎஸ் மரியாதை..!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துடன் நினைவிடம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி … Read more