#BREAKING : பொங்கல் தொகுப்பு குறித்து புகார் எழுந்த நிலையில் முதல்வர் நாளை ஆலோசனை..!

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகம் முழுவதும், ரூ.1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு  பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 95 சதவிகித மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் எதுவும் நடந்திருப்பின், இது தொடர்பாக கமிட்டி அமைத்து நடவடிக்கை  எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் தொடகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.