திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசிடராக சவுரவ் கங்குலி நியமனம்!

May 24, 2023 - 06:30
 0  1

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம்.

திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலி, திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசிடராக வருவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அம்மாநில முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திரிபுரா முதலமைச்சர் கூறுகையில், கங்குலியின் பங்கேற்பு சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும். திரிபுரா சுற்றுலாத் துறையின் பிராண்ட் தூதராக இருக்கும் எங்கள் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது மிகவும் பெருமைக்குரிய விஷயம். கங்குலியின் பங்கேற்பு நிச்சயமாக மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என்றுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow