வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த பெண்ணை வீட்டின் உரிமையாளர் மற்றும் மகன் செய்த கொடுமை..!

டெல்லியை சேர்ந்த மஞ்சு கோயல் (44) விதவையான இவர் அங்குள்ள ஒரு வீட்டில் 6 மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார். அங்குள்ள சில வீடுகளில் வேலை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில் மஞ்சு வசிக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ் பஹ்வா தனது வீட்டிலிருந்து மஞ்சு ரூ. 3,00000 திருடியதாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சதீஷ் பஹ்வா மற்றும் அவரது மகன் பங்கஜ் இருவரும்  சேர்ந்து மஞ்சுவை கடுமையாக  தாக்கினர்.அதில் மஞ்சு படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் … Read more

கொஞ்ச நாளா அண்ணனுக்கு குசும்பும் சேர்ந்து வருது !விஜயை வம்பிற்கு இழுத்த முன்னணி நடிகர் !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 19 ந் தேதி நடை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றியவர்களின் விவரம், வெறித்தனம் பாடல் பதிவு செய்ய பட்ட நிகழ்வு, சுபஸ்ரீ இறப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பேசினார். இந்நிலையில் இந்த படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியை பார்த்த நடிகரும் … Read more

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்-விஜய் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்று விஜய் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,  யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார்.ஆனால் விஜயின் இந்த கருத்துக்கு ஆளும் … Read more

மக்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் அட்லீயின் மனைவி!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இதில், தளபதி விஜயின் பேச்சு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. இயக்குனர் அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அட்லீயுடன் இணைந்து … Read more

காஷ்மீரில் ரத்தக்கறை படிந்திருப்பதற்க்கு காரணம் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான்! மத்திய அமைச்சர் அதிரடி கருத்து!

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட்டது. இதன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவு பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்தது. இருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் பீகார் மாநிலம் பாட்னாவில் மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர காரணம். அந்த தீவிரவாதத்தால் தான் காஷ்மீரில் ரத்தக்கறை படிந்துள்ளது. விரைவில் … Read more

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ! அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு  பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். சென்னையில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது  ஸ்கூட்டியில்  வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது  பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக  இளைய தலைமுறை அமைப்பை சேரந்த … Read more

முதல்ல சாண்டியை எனக்கு பிடிக்காது! இப்ப ரொம்ப க்ளோஸ்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து, சேரன் சாண்டி குறித்து பேசுகையில், முதல்ல எனக்கு சாண்டியை பிடிக்காது. ஏன்னென்றால் அவர் என்னை ரொம்ப கிண்டல் செய்வாரு. ஆனால், சிகிரெட் ரூமுக்குள்ள போன பிறகுதான் … Read more

அமெரிக்காவில் எரிசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எரிசக்தி துறையினரை சந்தித்தார் மோடி !

பிரதமர் மோடி ஒரு வார காலமாக அமெரிக்க சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்று பயணத்தில் முதலில் மோடி ஹூஸ்டன் நகரில் நடை பெற்ற ஹவுதி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டார்கள். அமெரிக்காவின் எரிசக்தி நிலையமாக இருக்கும் ஹூஸ்டன் நகரம் டெக்சாஸ் மாகாணத்தில் அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம்.  இது அமெரிக்காவின் 4 வது அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம் என்றும் கூறப்படுகிறது. … Read more

உள்ளாடையுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட தளபதி பட நடிகை!

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயின் நண்பன் படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இலியானா உள்ளாடைகளுடன் நடமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த … Read more

ஜோதிடரை நம்பி 450 மாடுகள் வாங்கி கடன் தொல்லை..! தலைமறைவான மெஸ் உரிமையாளர்..!

மதுரையில் உள்ள பிரபல ரமணா மெஸ் மூன்று கிளைகளைக் கொண்டது. இதன் உரிமையாளர் செந்தில். இவர் திடீரென தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இவரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியது. இதனால்  கோபாலகிருஷ்ணன் கடத்தியிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அவரிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. செந்திலுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை அதனால் ஒரு ஜோதிடர் அதிக மாடுகளை வாங்கி வளர்த்தால் பணம் பெருகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பெயரில் … Read more