முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் நபர் கவுரக்கொலை ..!

தலித் சமூகத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் சையத் அர்ஷினி என்னும் முஸ்லிம் பெண் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் காதலித்து, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்களது திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் அது வெளியில் அவ்வளவாக காட்டி கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 9 மணி அளவில் முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாகராஜூ எனும் … Read more

காற்று நிரப்பும் பொழுது புல்டோசர் டயர் வெடித்து விபத்து – இருவர் பலி!

ராய்ப்பூரில் உள்ள கன்குல் ஸ்டீலில் காற்று நிரப்பும் பொழுது புல்டோஸரின் டயர் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். சில்தாரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரு இளைஞர்கள் புல்டோஸரின் தாயாருக்கு காற்று நிரப்பியுள்ளனர். திடீரென அந்த தயார் வெடித்ததில் இருவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துமுள்ளனர். உயிரிழந்தவர்கள் இருவரும்  ராஜ்பால் சிங் மற்றும் பிரஞ்சன் நாம்தேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் மத்திய பிரேஷின் சாத்யாவில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் : காபூல் மசூதி குண்டுவெடிப்பு – 50 பேர் பலி ..!

இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொடர்ச்சியாக தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகராகிய காபூல் பகுதியில் உள்ள கலிபா சாஹிப் மசூதியில் நேற்று தொழுகை நடை பெற்றுள்ளது. இந்த தொழுகையில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த முஸ்லிம்களை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more

பஞ்சாப் : தீப்பிடித்து எரிந்த பேருந்துகள் – ட்ரைவர் ஒருவர் உயிரிழப்பு..!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பக்தா பாய் கா  மாவட்டத்தில் உள்ள மூன்று பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தின் போது, பேருந்திற்குள் நடத்துனர் குரு தேவ் சிங் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மேலும், இருவரும் மற்ற பேருந்திற்குள் காவலுக்காக நின்று கொண்டிருந்துள்ளனர். தீ எரிய ஆரம்பித்ததும் அவர்கள் இருவரும் லாவகமாக குதித்து உயிர் தப்பியுள்ளார். உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குறு தேவ் சிங் பரிதமாக கருகி உயிரிழந்துள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் … Read more

கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்த மனைவி மீது புகார் ….!

பீகார் மாநிலத்தில் உள்ள ரோஹ்தாஸ் எனும் மாவட்டத்தை சேர்ந்த பர்னா  எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணின் லவ்லி சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையின் போது அதிக அளவு கோபம் அடைந்ததால் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தான் … Read more

பள்ளத்தில் வாகனம் கவிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தை சேர்ந்த சாகிசைன் எனும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு வட்ட அதிகாரி பிரேம் லால் தம்தா கூறுகையில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவருக்கு பலத்த காயம்  கூறியுள்ளார். மேலும், பலத்த காயமடைந்த இருவரும் … Read more

மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் தட்டிக்கேட்ட சகோதரனை கொலை செய்த நபர் ..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மோகித் என்பவர் தனது சகோதரன் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒன்றாக வசித்த காலங்களில் மோகித்தின் சகோதரன் புபேந்திராவுக்கு மோகித்தின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மோகித்தின் மனைவி புபேந்திரா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததை கணவனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து இனி வீட்டிற்கு வரவேண்டாம் என மோகித் கூறியுள்ளார். இருந்தாலும் புபேந்திரா தொடர்ந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு வந்த புபேந்திராவை … Read more

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ் அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. நேற்று மசார்-இ-ஷரீப் பகுதியில் மட்டுமல்லாமல் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது மசூதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு … Read more

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு; 65 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அபு அலி சினா-இ-பால்கி மாவட்ட மருத்துவமனையின் தலைவர் கௌசுதின் அன்வாரி கூறுகையில், இந்த குண்டு வெடிப்பின் போது கிட்டத்தட்ட 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.

ஊஞ்சல் கம்பியில் சிக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு …!

பெங்களூருவில் மாகடி சாலையில் உள்ள 11 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் உள்ள ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று சிறுமி ஊஞ்சல் கம்பிகளில் சிக்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டதும் ஓடி சென்ற சிறுமியின் பெற்றோர்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் சிறுமி முன்னதாகவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.