இந்தியாவின் 2-வது ஆப்பிள் நேரடி விற்பனை நிலையம் திறப்பு.!

Apr 20, 2023 - 05:51
 0  1

ஆப்பிள் நிறுவனத்தின் தனது 2வது நேரடி விற்பனை நிலையத்தை டெல்லியில் திறந்து வைத்தார் அந்நிறுவன தலைவர் டிம் குக்.

டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோரை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார். இந்த ஸ்டோர் சாகேத்தில் உள்ள 'Select CITY' வாக் மாலின் முதல் தளத்தில் அமைந்துள்ளது. ஆனால், இன்று டெல்லியில் திறக்கப்பட ஆப்பிள் சாகெட் ஸ்டோர், மும்பை ஸ்டோரின் அளவை விட சிறியது ஆகும்.

முன்னதாக, கடந்த செவ்வாயன்று ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனைக் கடை மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவில் திறக்கப்பட்டது. மேலும், டெல்லியில் இன்று பெரும்பாலான கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பு,  சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டிவாக் மாலில் ஏராளமானோர் வரிசையில் நின்று புது பொலிவுடன் திறக்கப்பட ஆப்பிள் ஸ்டோரை பார்வையிட்டனர்.

பின்னர், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்ம்  வருகை தந்த வாடிக்கையாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த கடையில் 15 மொழிகள் பேசக்கூடிய 70 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் திறக்கப்பட இந்த இரு ஆப்பிள் ஸ்டோர்களும் வாடிக்கையாளர்களின் வாங்கும் அனுபவத்தை உயர்த்துவதையும், அதே நேரத்தில் ஆஃப்லைன் சில்லறை சந்தையில் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow