திடீரென சரிந்த இந்தியப் பங்குச்சந்தை..! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

Jul 20, 2023 - 05:14
 0  0
திடீரென சரிந்த இந்தியப் பங்குச்சந்தை..! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது. ஆனால், வாரத்தின் 3வது நாளான இன்று பங்குச்சந்தை குறியீடுகள் சரிவை சந்தித்துள்ளன.

இன்றைய வர்த்தக நாளில் 67,074 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ், 42.88 புள்ளிகள் சரிந்து 67,054 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 5.50 புள்ளிகள் சரிந்து 19,827 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,831 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,833 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. இதுவரை சென்செக்ஸ் குறியீடு 67 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது சரிவை சந்தித்திருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், அல்ட்ராடெக் சிமெண்ட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow