தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!

May 7, 2023 - 08:47
 0  1

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது,

இந்நிலையில், இன்று தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கோவை, நீலகிரி, ஈரோடு,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow