மாநாடு வெற்றி...! புளியோதரை தோல்வி..! - ஆர்.பி.உதயகுமார்

Aug 22, 2023 - 06:25
 0  1
மாநாடு வெற்றி...! புளியோதரை தோல்வி..! - ஆர்.பி.உதயகுமார்

மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று முன்தினம் அதிமுக “பொன்விழா எழுச்சி” மாநாடு பிரமாண்டமாக நடைப்பெற்றது.  இதற்காக பிரமாண்ட  செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டை லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில், பொதுக்களின் வசாதகிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில், இவர்களுக்கென உணவு வசதிகளும் சிறப்பான முரையில் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மக்களுக்கு கொடுப்பதற்காக டன் கணக்கில் மீதமிருந்தது. இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள், மதுரை மாநாடு வெற்றியை குறை சொல்ல முடியாததால் புளியோதரை தோல்வியை குறை சொல்கின்றனர் என  குற்றம்சாட்டியுள்ளார்.

 மேலும், மதுரை அதிமுக மாநாடு வெற்றியடைந்துள்ளது. 15 லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டது. மாநாடு பற்றி யாரும் குறை சொல்லவில்லை, புளியோதரை பற்றி குறை சொல்கின்றனர். மிச்சமான உணவுதான் கீழே கொட்டப்பட்டது, அதை மிகைப்படுத்துவதா? உணவு மிச்சமானதை ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டுகின்றனர். 1 லட்சத்து 10 கிலோவிற்கு மேல் உணவு சமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow