அதிமுக ஊழலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் - டிடிவி தினகரன்
ஊழல் பட்டியல் உண்மையா, பொய்யா என்பதை திமுக அமைச்சர்கள் தான் கூற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் பேட்டி.
அதிமுகவினரின் ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள அவரது திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.டி.வி.தினகரன், அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியல் என்ன அதிர்வலையை ஏற்படுத்தும் என பொறுத்து இருந்து பார்ப்போம்.
ஊழல் பட்டியல் குறித்து அமைச்சர்கள் தான் கூற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் குறித்த இறுதி முடிவு இந்தாண்டு இறுதியில் எடுக்கப்படும். திருச்சியில் ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு என்னை அழைக்கவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இதுவரை என்னை சந்திக்கவில்லை, அழைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு இது ஒரு சிறந்த புத்தாண்டாக இருக்கும் என்றும் அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
What's Your Reaction?