பழனி முருகன் கோவில், தமிழில் குடமுழுக்கு! அரசு ஏற்பாடு.!

பழனி முருகன் கோவிலில், தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் வரும் ஜன-27இல் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழில் குடமுழுக்கு விழா, நடைபெறுவதற்கு, உறுதி செய்து அதற்கான நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, குடமுழுக்கு விழா தமிழில் நடைபெறும், எனவும் மந்திரங்கள் தமிழில் உச்சரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment