தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் .! 3 பேர் பலி .!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த  ஞாயிற்றுக் கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.அதில் மூன்று பேரின் உடலில் குண்டுகள் பாய்ந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரின் ஒரு தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் அதாவது  ஞாயிற்றுக்கிழமை காலை  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பிரார்த்தனையில் … Read more

கேரள அரசு செய்ததை தமிழக அரசும் செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன். தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் குடியுரிமை  திருத்த சட்டதிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு  வர முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.இதற்கு ஆதரவாக 138 … Read more

ரஷீத்கானை “ஒட்டக பேட்” எடுத்து வாருங்கள் என கூறிய சன் ரைசர்ஸ் .!

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர்  ரஷித்கான் ஒட்டக வடிவத்தில் ஒரு வித்தியாசமான பேட்டை பயன்படுத்தி விளையாடி உள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர்  ரஷித்கான் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவர் இத்தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில்  ரஷித் கான் விளையாடும்போது ஒட்டக வடிவத்தில் ஒரு … Read more

‘இரண்டு புதிய ஆஃபர்’.! 50GB டேட்டா நொடிக்கு 20MB வேகம் பிரபல நிறுவனத்தின் அதிரடி சலுகை..!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாத சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாத சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி … Read more

சென்னையில் ராட்சச ராட்டினத்தில் சிக்கிய கேரள சிறுமியின் தலை! ஆபரேட்டர் தப்பி ஓட்டம்!

சென்னை பெசன்ட் நகரில் ராட்சச ராட்டினங்கள் சிறுவர்களுக்காக இயங்கி வருகின்றன.  அதில் ஒரு ராட்சச ராட்டினத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு சிறுமி ஏறியுள்ளார். அப்போது அச்சிறுமியின் தலை ராட்டினத்தின் பக்கவாட்டில் சிக்கியுள்ளது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சிறுவர் சிறுமியர் விளையாடும் ராட்சச ராட்டினங்கள் இயங்கி வருகின்றன. இதில் கேரள மாநிலத்தினை சேர்ந்த சல்மா என்கிற சிறுமி  அங்குள்ள ஒரு ராட்சச ராட்டினத்தில் எறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அச்சிறுமியின் தலை ராட்டினத்தின் பக்கவாட்டில் உள்ள கம்பியில் … Read more

வாக்குப்பெட்டிககளில் வைக்கப்பட்டுள்ள 10 உறைகள் பிரிப்பு.! வேட்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்.!

2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்டு அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இன்று காலை முகவர்கள் சென்று பார்த்த போது, வாக்கு பெட்டிககளில்  வைக்கப்பட்டுள்ள 10 உறைகள் பிரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. நேற்று 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள், காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அறையில் பலத்த … Read more

நிதி ஆயோக் வெளியிட்ட பட்டியல் ..! கேரளா முதலிடம்,தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் ?

2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது. இந்த பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.  சமூக ,பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து ,தர வரிசை பட்டியலை தயாரித்தது நிதி ஆயோக். 2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது.இந்த பட்டியலில் கேரள மாநிலம் 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.2 -வது இடத்தில் 69 புள்ளிகளுடன் இமாசலப் … Read more

கோவை சிறுமி வழக்கில் நியமனம் செய்யப்பட்ட பெண் அதிகாரி யார் தெரியுமா .? .!

கோவை  மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி சிறுமி வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அனந்தநாயகி இந்த வருடம்  சிறந்த புலன் விசாரணை அதிகாரிக்கான  பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  கோவையில் உள்ள பன்னிமடை பகுதியை சார்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட … Read more

சூப்பர் ஸ்டாரிடம் நான் இந்த மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் கதை கூறியுள்ளேன்! – ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.  சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ஒரு கதை கூறியுள்ளேன். என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்பட ப்ரோமோஷனுக்காக அளித்த ஒரு பேட்டியளித்தார். அவர் அளித்த … Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய இளம்பெண்.! இரு கால்கள் இழந்து பரிதாபம்.!

டெல்லியில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். நிலை தடுமாறிய அவர் ரயிலுக்கும் பிளாட்ஃபாரத்திற்கும் இடையில் சிக்கி இரு கால்களை இழந்துள்ளார். டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிஜாமுதின் ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். ரயில் செல்லும் திசையில் இறங்காமல், நின்று கொண்டிருக்கும் ரயிலில் இருந்து இறங்குவது போல நேராக இறங்க முயற்சி செய்ததால், நிலை … Read more