ரஷீத்கானை “ஒட்டக பேட்” எடுத்து வாருங்கள் என கூறிய சன் ரைசர்ஸ் .!

  • ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.
  • இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர்  ரஷித்கான் ஒட்டக வடிவத்தில் ஒரு வித்தியாசமான பேட்டை பயன்படுத்தி விளையாடி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர்  ரஷித்கான் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இவர் இத்தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில்  ரஷித் கான் விளையாடும்போது ஒட்டக வடிவத்தில் ஒரு வித்தியாசமான பேட்டை பயன்படுத்தி விளையாடி உள்ளார்.

அந்த வித்தியாசமான பேட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பத்திவிட்டது. இதை “ஒட்டகம்” என அழைக்கிறார்கள். என பதிவிடப்பட்டு இருந்தது. அந்த ஒட்டக பேட்டைப் பார்த்த ரசிகர்கள் அந்த பேட்டின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிந்து வந்தனர்.

அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷித் கானுக்கு ஒரு கோரிக்கை வைத்தனர்.அதில் “ஐபிஎல் 2020”-க்குஇந்த வித்தியாசமான பேட்டை எடுத்து  வாருங்கள் ” என கூறப்பட்டு இருந்தது.அதற்கு ரஷித்கான் கண்டிப்பாக என பதில் அளித்துள்ளார்.

 

author avatar
murugan