ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய இளம்பெண்.! இரு கால்கள் இழந்து பரிதாபம்.!

  • டெல்லியில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார்.
  • நிலை தடுமாறிய அவர் ரயிலுக்கும் பிளாட்ஃபாரத்திற்கும் இடையில் சிக்கி இரு கால்களை இழந்துள்ளார்.

டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிஜாமுதின் ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். ரயில் செல்லும் திசையில் இறங்காமல், நின்று கொண்டிருக்கும் ரயிலில் இருந்து இறங்குவது போல நேராக இறங்க முயற்சி செய்ததால், நிலை தடுமாறிய அவர் ரயிலுக்கும் பிளாட்ஃபாரத்திற்கும் இடையில் சிக்கினார்.

இந்த கோர விபத்தில் அந்த இளம்பெண் தன் இரு கால்களை இழந்துள்ளதாகவும், பின்பு ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயிலில் சாகசம் செய்த இளைஞர் பாலத்தில் மோதி பலி .!

இதற்கு முன்னர் கடந்த 26-ம் தேதி மும்பையில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த 20 வயது தில்ஷன் என்ற இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்து வந்து உள்ளார். திடீரென ஆற்றுப்பாலத்தில் மோதி தில்ஷன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்