கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

PM Modi: கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தலைநகர் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கத்திற்கு சென்றார். அங்கு அணுசக்தி மின் நிலைய வளாகத்தில் ஈனுலையில் தொடக்க பணிகளை அவர் பார்வையிட்டார். 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை துவங்கி வைத்த பிரதமர் … Read more

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

stalin modi

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 … Read more

இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி… பலத்த பாதுகாப்பில் முக்கிய இடங்கள்!

pm modi

தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். பிரதமர் மோடி பெங்களுருவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். இதன்பின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆளுநர் மாளிகையில் … Read more

கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனை…பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து!

pm modi - X MAS

கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (இன்று) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில், இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம், டி. டி. வி. தினகரன், விஜயகாந்த், ஆகியோர் தங்கள் … Read more

ஆட்சி அமைப்பது யார்.? 4 மாநில வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

சமீபத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை  நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி, மிசோரம் தேர்தல் முடிவுகளை டிசம்பர் 4ம் தேதி (நாளை) அறிவிக்க முடிவு செய்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் … Read more

5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்..!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் வரத்தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான் – அமைச்சர் உதயநிதி

Minister Udhayanidhi stalin

சேலம் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் குட்டிக்கதை ஒன்றை கூறினார். பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய்; நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று, இதில் பூட்டு என்பது தமிழ்நாடு; சுத்தியல் ஒன்றிய பாஜக அரசு; மக்களின் இதயத்தை தொடும் சாவி திமுக என  தெரிவித்தார். மேலும், 2021 தேர்தலில் … Read more

விசா பிரச்சனை தீர்க்க வேண்டும்- பிரதமரிடம் லக்ஷ்யா சென் கோரிக்கை..!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரரும், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான லக்ஷ்யா சென் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரிடம், ஜப்பான் மற்றும் சீனா ஓபன்களில் பங்கேற்க விசா பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 22 வயதான லக்ஷ்யா சென் ஜப்பான் விசா கிடைக்காததால் தனது ஏமாற்றத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். லக்ஷ்யா சென்  பயிற்சியாளர் மற்றும் பிசியோ … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ஷாருக்கான் இரங்கல்.!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100-ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” பிரதமர் மோடி அவர்களின் தாயார் … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – குஜராத் செல்லும் இபிஎஸ், ஓபிஎஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி விமானத்தில் குஜராத் செல்கின்றனர்.  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக இபிஎஸ், … Read more