பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார்! ராகுல் காந்தி விமர்சனம்!

rahul gandhi and pm modi

Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளைமறுநாள் முதல்  தொடங்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி  இன்று தேர்தல் பரபரப்புரை செய்தார். அப்போது 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் பிரதமர் மோடி என விமர்சித்து பேசியுள்ளார். … Read more

400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை!

pm modi

PM Modi : மக்களவை தேர்தல் அட்டவணை வெளியானதை தொடர்ந்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீட்டை கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்டு, மக்களவை தேர்தலுக்கான பிரசாரங்களை தொடங்கி விட்டனர். அந்தவகையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு சேலத்தில் இன்று மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. Read More – அதிமுக சார்பாக பேசிய ஓ.பி.எஸ்.! பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ருசிகரம்.! இந்த … Read more

காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்தும்… பிரதமரின் முதல் பயணமும்…

pm modi

PM Modi : ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் செல்கிறார். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ (Article 370) மத்திய அரசு ரத்து செய்திருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, அவை … Read more

தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

pm modi

Narendra modi : மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நேற்று பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடக்கத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மதுரை சென்ற பிரதமர், கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு, மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கிய … Read more

நாளை பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு செல்கிறார்..!

Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 20-ம் தேதி) ஜம்மு செல்கிறார். நாளை காலை 11:30 மணியளவில், ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவும், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், கல்வி, ரயில், சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவை. நிகழ்ச்சியின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக … Read more

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது! பிரதமர் மோடி வாழ்த்து!

Narendra Modi Lal Krishna Advani

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’ விருது. இந்த விருது மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், தற்போது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது  வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் … Read more

பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..!

Mohamed Muizzu

கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைபடங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தொடர்பாக மாலத்தீவு அதிபா் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சா்கள் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை பற்றியும் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு … Read more

இது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்! மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

pm modi

நாட்டின் 75-குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் அகில இந்திய தலைமை அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, இந்த மாநாடு இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை அடுத்து உடனடியாக நடைபெறுவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. குடியரசு தினத்தையொட்டி நமது அரசியலமைப்பு சட்டமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சமயத்தில், அரசியல் நிர்ணய … Read more

உங்களின் கனவே எனது லட்சியம்.. இதுவே மோடியின் வாக்குறுதி – டெல்லியில் பிரதமர் உரை!

pm modi

தேசிய வாக்காளர்கள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாட உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள 5,000 இடங்களிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் எனவும் கூறப்பட்டது. அதன்படி, டெல்லியில் முதல் முறை வாக்காளர்களுடன் … Read more

தேசிய வாக்காளர்கள் தினம் – இளம் வாக்காளர்களுடன் இன்று உரையாடும் பிரதமர் மோடி!

pm modi

குடியரசு தேசத்தில் வாக்களிப்பது என்பது அவசியமான கடமைகளில் ஒன்றாகும். தேசம் நமக்கு அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், தேசத்துக்கு நாம் ஆற்றும் ஜனநாயக கடமை என்பது மிக முக்கியமானது. இந்த சூழலில், வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய வாக்களார்கள் தினம் இன்று (ஜன.25) நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.  18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், இந்த பிரச்சினையை தீர்க்க காண முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்தியா முழுவதும் ஒவ்வொரு … Read more