மணிப்பூர் விவகாரம் – நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

Jul 24, 2023 - 06:18
 0  1
மணிப்பூர் விவகாரம் – நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் வன்முறை விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை கடந்த வாரம் தொடங்கிய இரண்டு நாட்களும் முடங்கியது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க கோரியும், இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தியும்  I.N.D.I.A. கூட்டணி எம்.பி.-க்கள் சார்பில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.

அந்த வகையில், இன்று காலை தொடங்கிய மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow