தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

பாஜக, அதிமுக என யாருடனும் கூட்டணி இல்லை  என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணியில் இல்லாததாலேயே டெல்லி கூட்டத்திற்கு பாஜக அழைக்கவில்லை. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும்.

டெல்டாவில் கருகும் பயிர்களை காக்க திமுக அரசால் தண்ணீரை பெற்று தர முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி தலைவர்களிடையே முரண்பாடு உள்ளது. எனவே, தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில், யாருடன் கூட்டணி என்பது குறித்து கேப்டன் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.