தமிழ்நாடு, குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிணைப்பு உள்ளது..! பிரதமர் மோடி புகழாரம்..!

Mar 26, 2023 - 05:37
 0  0

சௌராஷ்டிரா தமிழ் சங்கம நிகழ்ச்சிகள், தமிழ்நாடு குஜராத் உறவை வலுப்படுத்துகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும் குஜாராத்திற்கும் இடையிலான 100 ஆண்டுகள் கடந்த உறவு குறித்தும் தமிழ்நாட்டில் குடியேறிய சௌராஷ்டிரா மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் மாநில மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை குஜராத்தின் பல பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் குஜராத் அமைச்சர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வாழும் சௌராஷ்டிரா மக்களை சந்தித்தும் பல மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் நேரடியாக சென்றும் பங்கேற்றனர். திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற சாலைக் கண்காட்சியின் புகைப்படம், வீடியோக்களை பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு குஜராத் இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே பிணைப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு, குஜராத் உறவை சௌராஷ்டிரா தமிழ் சங்கம நிகழ்ச்சிகள் மேலும் வலுப்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow