கர்நாடகாவை காப்பாற்ற மனசாட்சியுடன் வாக்களியுங்கள்... நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்!!

May 10, 2023 - 05:12
 0  1

இன்று கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பலரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் காலையிலே தனது வாக்கினை பதிவு செய்தார்.

பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வருகை தந்து கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு அவர் வாக்களித்தார்.  வாக்கு அளித்ததை தொடர்ந்து பிரகாஷ் ராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது " காலை வணக்கம் கர்நாடகா.. நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக, 40% ஊழல் அரசியலுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்.. கர்நாடகாவை காப்பாற்ற உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்.." என பதிவிட்டுள்ளர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow