வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி -முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

May 7, 2023 - 07:17
 0  3

சென்னை: மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு நிறைவடைந்து, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு நினைவிடங்களில் CM மரியாதை செலுத்தியபோது, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான்.

இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும். விமர்சனங்களை பற்றி கவலைப்படமாட்டேன், நல்லவைகளை எடுத்துக்கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன் என்று பேசியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow