ஐந்தாவது நாள்..ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 64,375 புள்ளிகளில் வர்த்தகம்..!

Jun 30, 2023 - 05:37
 0  0
ஐந்தாவது நாள்..ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 64,375 புள்ளிகளில் வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 460.57 புள்ளிகள் உயர்ந்து 64,375 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 19,100 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளில் 64,068 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 460.57 புள்ளிகள் அல்லது 0.72% என உயர்ந்து 64,375 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 128.85 புள்ளிகள் அல்லது 0.68% உயர்ந்து 19,100 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 63,915 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,972 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 64 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் மாருதி சுசுகி இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ் லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோடக் மஹிந்திரா வங்கி, என்டிபிசி லிமிடெட், நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow