பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதா அதானி குழுமம்.? உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்.!

May 10, 2023 - 05:41
 0  1

அதானி குழும விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை நிபுணர் குழுவானது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குசந்தையில் முறைகேடாக ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். இதனால் அதானி குழுமம் பங்குசந்தையில் பெரும் சரிவை கண்டது. இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை - அதானி குழும விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டிஓய் சந்திர சூட், நீதிபதிகள் பி.எ.ஸ். நரசிம்ஹா, ஜே.பி. பரதிவாலா அமர்வு அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை அமைத்தனர். எஸ்பிஐ முன்னாள் தலைவர் ஓ.பி.பாட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி. தேவதர், கே.வி. காமத். இன்போசிஸ் துணை நிறுவனர் நாதன் நிலேகனி, வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் ஆகிய 5 பேர் அடங்கிய நிபுணர் குழுவை உச்சநீதிமன்ற அமர்வு நியமித்தது. இந்த குழுவானது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரேவால் கண்காணிக்கப்படும்எனவும் கூறப்பட்டது.

இந்த நிபுணர் குழுவானது தங்கள் விசாரணையை நிறைவு செய்து, அந்த விசாரணை அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை தாக்கல் செய்தனர். இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாக் கொண்டு நாளை மறுநாள் அதானி குழும விவகாரம் தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் துவங்க உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow