பெண் தொழில் முனைவோர்.. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புதிய அறிவிப்பு.! நிதியமைச்சர் தகவல்.!

Mar 20, 2023 - 05:52
 0  2

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியானது, வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம். -  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழக பட்ஜெட்  கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பட்ஜெட் அறிவிப்புகள் :

இதில், மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி, மீனவர்களுக்கு மீன்பிடி தடை கால ஊதியம் , சென்னை விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த நிதியுதவி என பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டார். மகளிர் சுயஉதவி குழுக்கள் :

அடுத்ததாக, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியானது, வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோர் :

மேலும், பெண் தொழில் முனைவோர், புதிய தொழில்களை தொடங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் புதிய இயக்கம் ஒன்று அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow