பெண் தொழில் முனைவோர்.. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு புதிய அறிவிப்பு.! நிதியமைச்சர் தகவல்.!
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியானது, வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம். - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். பட்ஜெட் அறிவிப்புகள் :
இதில், மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி, மீனவர்களுக்கு மீன்பிடி தடை கால ஊதியம் , சென்னை விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த நிதியுதவி என பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டார். மகளிர் சுயஉதவி குழுக்கள் :
அடுத்ததாக, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியானது, வரும் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோர் :
மேலும், பெண் தொழில் முனைவோர், புதிய தொழில்களை தொடங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் புதிய இயக்கம் ஒன்று அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளர்.
What's Your Reaction?