காஷ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்..!

காஸ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். #KulgamEncounterUpdate: 01 unidentified #terrorist killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/87lQOPGAAm — Kashmir Zone Police (@KashmirPolice) November 20, 2021

காஷ்மீர் : பயங்கரவாதிகளுக்கு உதவிய 25 பேர் கைது …!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 25 பேர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் லக்ஷர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி பயங்கரவாத சதித்திட்டம் நடத்துவதாக கடந்த மாதம் பத்தாம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த தீவிரவாதிகளுக்கு உதவியதன் அடிப்படையில் கஷ்மீரில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் இருபத்தி மூன்று பேரை … Read more

காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு ; பிரதமர் இழப்பீடு அறிவிப்பு..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து 8 பேர் உயிரிழப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோடா அருகே சென்ற பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 8 பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமுற்றோருக்கு ரூ. 50,000  … Read more

2021 ல் காஷ்மீரில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்- காஷ்மீர் காவல்துறை..!

2021 ஆம் ஆண்டில் காஷ்மீரில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் ஐஜி விஜயகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரில் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். 28 பேரில், ஐந்து பேர் உள்ளூர் இந்து/சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் உள்ளூர் அல்லாத இந்து தொழிலாளர்கள் என தெரிவித்தார். ஏராளமான பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாலும் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டதாலும், எல்லை தாண்டி பயங்கரவாதிகள் அப்பாவி … Read more

ஜம்மு-காஷ்மீர்: மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ​​ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் இன்றிலிருந்து 10 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம், தனித்த மளிகை/காய்கறி/இறைச்சி/பால் கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் மற்றும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் முகமது … Read more

ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உரி அருகே ராம்பூரில் மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே-47, 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு … Read more

காணாமல் போன ராணுவவீரர்.., 13 மாதங்களுக்கு பிறகு கிடைத்துள்ள உடல்..!

13 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் உடல் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாகிர் மஞ்சூர் வாகே, இந்திய ராணுவத்தின் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2020 இல் காணாமல் போய் உள்ளார். தற்போது இவரது தந்தை மஞ்சூர் அகமது பிஎஸ்என்எல் கோபுரத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உடலை அடையாளம் கண்டுபிடித்துள்ளார். ஷோபியான் ஹர்மேன் கிராமத்தில் வசிக்கும் ஷாகிர் மஞ்சூர் கடந்த வருடம் ஆகஸ்ட் 2 அன்று, மாலை நேரத்தில் காணாமல் போய் … Read more

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.  தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ பகுதியில் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்ட்டிக் பள்ளி அருகே ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாலை 6.05 மணியளவில், வான்போவில் பாண்டூ சர்மா என்ற ஒரு போலீஸ் பணியாளரை பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். மேலும் இதனால் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி … Read more

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்..!-3 பேர் படுகாயம்..!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலுக்கு 3 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் புல்வாமா சவுக் பகுதியில் பாதுகாப்புப் படையின் வாகனத்தை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால்  வெடிகுண்டு சாலையோரத்தில் விழுந்து வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்களில் … Read more

ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை மீது தீவிரவாதிகள் தாக்குதல்..!

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹ்மத் பல புல்லட் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், பகல் 1.35 மணியளவில், பயங்கரவாதிகள் கன்யார் பகுதியில் உள்ள போலீஸ் நாகா பார்ட்டி மீது துப்பாக்கிச் சூடு … Read more