காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழப்பு ..!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் உள்ள எல்லைக்கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் இருவர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். மற்றொரு ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ராணுவ அதிகாரி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சிறுமி ஆசிபா படுகொலை செய்ததை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்..,

திருச்சி:மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்  மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நேற்று மாலை நடந்தது.மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனர் பசீர்அகமது தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வகித்தார். வக்கீல்கள் தமிழகன், குணசீலன், நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி உமாமகேஸ்வரி, மக்கள் பாதை ஸ்டீபன், திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு … Read more

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகை வரலட்சுமி சரத்குமார் மோடிக்கு கண்டனம் ..!

காஷ்மீர் சிறுமி பாலியல் சித்ரவதை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது முதியவர் ஒருவர் பேத்தி வயதில் இருக்கும் பெண் குழந்தையை சித்ரவதை செய்யும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கொதித்துள்ளார். இதுதான் நாம் வாழும் உலகமா? இந்த மாதிரியான நாட்டை தான் நீங்க ஆள விரும்பினீர்களா பிரதமர் மோடி அவர்களே? ஓட்டு … Read more

4 இந்திய வீரர்கள் எல்லையில் வீரமரணம் : காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜேரி மாவட்டத்தில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பகுதியில் பாகிஸ்தான்  ராணுவம் தொடர் தாக்குதல் அத்துமீறி நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ veeவீரர்கள் நான்கு பேர் பலியாகினர். இந்த அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலி !காஷ்மீர் பனிச்சருவில் சிக்கிய பரிதாபம் ….

காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், இருவர் பனிக்குள் சிக்கியுள்ளனர். குப்வாரா மாவட்டம் டாங்தர் பகுதியில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்கள், எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் பொறியாளர் என 9 பேர், வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனிச்சரிவு ஏற்பட்டு வாகனம் முழுவதையும் மூடியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், பனிச்சரிவுக்குள் சிக்கி இருந்த 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் துர்திருஷ்டவசமாக பனிச்சரிவில் … Read more

தீவிரவாதிகளாக மாறி வரும் காஷ்மீர் இளைஞர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அதிகமாக ஊடுருவி அங்குள்ள இளைஞர்களிடையே தீவிரவாதத்தை பரப்பி தீவிரவாதிகளாக இளைஞர்களை மாற்றி வருகின்றனர். ஏற்கனவே அங்கு தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக ரயில் சேவை 50வது தடவையாக நிறுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் நவம்பர் வரை சுமார் 117 காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி உள்ளனர். இந்த தகவல் அங்குள்ள போலீசார் வழக்கு பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. source : dinasuvadu.com

இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் : பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

காஷ்மீர் மாநிலத்தின் கேரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு இந்திய ரானுவத்துக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இன்னும் சண்டை நடந்து வருவதால் அந்த பகுதி பதற்றமாக இருக்கிறது. source : dinasuvadu.com

50-வது முறையாக ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை இன்று தொடக்கம் : காஷ்மீர்

காஸ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள் மக்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, போராட்டத்துக்கு அலைப்புவிடுத்ததன் காரணமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவையானது, இன்று மீண்டும் செயல்பட தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 50வது முறையாக காஷ்மீரில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. source : dinasuvadu.com

பாகிஸ்தான் மீது இந்தியா 1300 முறை தாக்குதல் நடத்தியுள்ளது : பாக் செய்தி தொடர்பாளர்

இந்திய ராணுவமானது, பாகிஸ்தான் மீது 1300 முறை தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் சுமார் 52 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 175 பேர் கடும் காயமுற்றதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாடியுள்ளார். பாகிஸ்தான், இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறும்போது, ‘ காஷ்மீர் மீது இந்திய அரசாங்கம் அடக்குமுறைநடத்தி வருகிறது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் இருந்து திசை திருப்பும் முயற்சியே, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் … Read more

காஷ்மீரில் அதிகாலையிலேயே நிலநடுக்கம்

காஷ்மீரில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு அங்குள்ள வீடுகள் லேசாக குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை. இதற்கு முன்னல் நேற்று, இமயமலை பகுதியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் நேற்று இரவு 8.49 மணிக்கு திடீரென பூமி அதிர்வு ஏற்பட்டது. இந்த பூமி அதிர்ச்சி ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 30 … Read more