லடாக் எல்லைப்பகுதியில் படைகளை குவிக்கும் சீனா.! இந்திய எல்லைப்பகுதியில் பதற்றம்.!

லடாக் எல்லைப்பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ளதால் இந்தியாவும் அங்கு படைகளை அதிகரித்துள்ளது.  லடாக்கில் பல்வேறு பகுதியில் எல்லைக்கோடு அருகே தனது பகுதியில் சீனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ படைகளை குவித்துள்ளது. அங்கு சீன படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் பாங்காங் டிஎஸ்ஓ ஏரி மற்றும் பிங்கர் பகுதியில் சீன படைகள் உள்ளதோடு இந்திய எல்லைப்பகுதிக்கு அருகில் 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன ராணுவ வாகனம் நடமாட்டம் இருப்பதாக இந்திய … Read more

பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.!

ஜம்மு காஷ்மீர் இல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.  இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போதோ போடப்பட்டுவிட்டது. இருந்தும், பாகிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது தொடர்ந்து காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவ்வாறு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த ஜாவீத் கான், ரசூல் கான், சவுகிபால் ஆகியோர் … Read more

இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பூடான் நாட்டில் வெடித்து சிதறியது! இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்தனர்!

இந்திய ராணுவம் பூடான் நாட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி பூடான் நாட்டில் நடைபெற்றது. இதற்காக இந்திய விமானப்படை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டருடன் பூடான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய விமான வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர் பயிற்சியளிக்க, பூடான் நாட்டு ராணுவவீரர் பயின்று கொண்டிருந்தார். வானில் இந்த பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப … Read more

#Breaking : தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்?

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள்ளதாக ராணுவ கமாண்டோ எஸ்.கே.சைனி தற்போது தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த கூடுதல் தகவலில்படி, ‘ குஜராத் சர் க்ரீக் எனும் கடற்கடையில் கேட்பாடடற்று சில படகுகள் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலமாக பயங்கரவாதிகள் உட்புகுந்துள்ளார்களா என தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ‘ என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது ராணுவம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம்…!!

இந்திய எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 1,962 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லையில் தொடர் அத்துமீறலில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக இந்தியாவுக்கான அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கையை பாகிஸ்தான் மதிக்கவில்லை என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இந்திய எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 1,962 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் … Read more

3 தீவிரவாதிகள் சுட்டு கொலை…இந்திய ராணுவம் அதிரடி…!!

காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் லாரோ பகுதியில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர்.  அவர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.இதில், பதுங்கி இருந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் … Read more

“கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்” பாகிஸ்தான் ராணுவம் வெறிச்செயல்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் மேலும் இருநாடுகள் இடையிலான பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இதனையடுத்து சர்வதேச எல்லை மற்றும் எல்லைப் பாதுகாப்பு கோடு பகுதியில் பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் … Read more

இந்தியா பதிலடி அத்துமீறிய பாகிஸ்தானுக்கு 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி…

இந்தியா; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுக்கிறது. அந்த வகையில் நேற்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தரப்புக்கு        ராணுவத்திர்க்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ருக் சக்ரி செக்டாரில் என்ற இடத்தில்  இரு தரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் … Read more

இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் : பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

காஷ்மீர் மாநிலத்தின் கேரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு இந்திய ரானுவத்துக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இன்னும் சண்டை நடந்து வருவதால் அந்த பகுதி பதற்றமாக இருக்கிறது. source : dinasuvadu.com

50-வது முறையாக ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை இன்று தொடக்கம் : காஷ்மீர்

காஸ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள் மக்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, போராட்டத்துக்கு அலைப்புவிடுத்ததன் காரணமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவையானது, இன்று மீண்டும் செயல்பட தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 50வது முறையாக காஷ்மீரில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. source : dinasuvadu.com