பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.!

ஜம்மு காஷ்மீர் இல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போதோ போடப்பட்டுவிட்டது. இருந்தும், பாகிஸ்தான் வீரர்கள் அவ்வப்போது தொடர்ந்து காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த ஜாவீத் கான், ரசூல் கான், சவுகிபால் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டுள்ளன. மேலும், 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.