ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலி !காஷ்மீர் பனிச்சருவில் சிக்கிய பரிதாபம் ….

காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், இருவர் பனிக்குள் சிக்கியுள்ளனர். குப்வாரா மாவட்டம் டாங்தர் பகுதியில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்கள், எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் பொறியாளர் என 9 பேர், வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனிச்சரிவு ஏற்பட்டு வாகனம் முழுவதையும் மூடியது.
உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், பனிச்சரிவுக்குள் சிக்கி இருந்த 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் துர்திருஷ்டவசமாக பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பனிச்சரிவில் சிக்கி உள்ள மேலும் இருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
source: dinasuvadu.com

Leave a Comment