ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உரி அருகே ராம்பூரில் மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே-47, 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதற்கு முன்னரும் உரி பகுதியின் அருகே ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube