ஜம்முவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நாளை மதுரை கொண்டுவரப்படுகிறது.!

ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது.  ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை … Read more

ஸ்மார்ட்போனால் துப்பாக்கி குண்டிலிருந்து தப்பிய உக்ரைன் இராணுவ வீரர் – வீடியோ உள்ளே..!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ச்சியாக போர் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களால் முடிந்த அளவிற்கு போரை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போர்க்களத்தில் இருந்த உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவரது ஸ்மார்ட் போன் மூலமாக அவர் துப்பாக்கி குண்டு வீச்சிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் … Read more

தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு!

சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்துள்ளார் என தகவல் கூறப்படுகிறது. உயிரிழந்த எம்என் மணி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்த்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக வீரர் எம்என் மணி உள்பட சிஆர்பிஎப் வீரர்கள் 12 சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. ஹைடர்போரா என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த வீரர் மணி … Read more

காணாமல் போன ராணுவவீரர்.., 13 மாதங்களுக்கு பிறகு கிடைத்துள்ள உடல்..!

13 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் உடல் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாகிர் மஞ்சூர் வாகே, இந்திய ராணுவத்தின் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2020 இல் காணாமல் போய் உள்ளார். தற்போது இவரது தந்தை மஞ்சூர் அகமது பிஎஸ்என்எல் கோபுரத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உடலை அடையாளம் கண்டுபிடித்துள்ளார். ஷோபியான் ஹர்மேன் கிராமத்தில் வசிக்கும் ஷாகிர் மஞ்சூர் கடந்த வருடம் ஆகஸ்ட் 2 அன்று, மாலை நேரத்தில் காணாமல் போய் … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்…! காயமடைந்த ராணுவ வீரர்…!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இடைப்பட்ட இரவில் தாதல் கிராமத்தில் தேடுதல் வேட்டையின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள கிராமம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், … Read more

தோண்ட தோண்ட கிடைத்த தங்கம்…! மலையை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள்…!

காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் லுகிகி என்ற கிராமத்தில் இருக்கும் மலை ஒன்றில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது காணப்படுவதாக உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான, காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் லுகிகி என்ற கிராமத்தில் இருக்கும் மலை ஒன்றில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது காணப்படுவதாக உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி கிராமம் முழுவதும் தீயாய் பரவியதையடுத்து, கோடாரி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மலைப்பகுதிக்கு … Read more

கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் – 4 சீன வீரர்கள் உயிரிழந்ததை ஒப்புக்கொண்ட சீனா!

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தற்பொழுது சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப்பகுதியான கல்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது படைகளை குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக இந்திய குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் சீனா இதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், இந்திய ராணுவம் தனது படைகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பிய போது இந்திய இராணுவத்தினரிடம் சீன … Read more

ஸ்ரீநகரில் 2 இராணுவ வீரர்கள் வீர மரணம்..!

இன்று ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மூன்று பயங்கரவாதிகள் எங்கள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் ஒரு காரில் தப்பிச்சென்றனர். மாலைக்குள் நாங்கள் அந்தக் குழுவை அடையாளம் காண்போம். அந்த மூன்று பேரில் இருவர் அநேகமாக பாகிஸ்தானியர்கள் என்றும் ஒருவர் உள்ளூரை சார்ந்தவர் என்று ஒரு மூத்த போலீஸ் … Read more

6 மாத கருவை கலைக்க மனைவிக்கு விஷம் கொடுத்த ராணுவ வீரர் குடும்பம் -பெண்ணும் உயிரிழந்த சோகம்!

6 மாத கருவை கலைக்க மனைவிக்கு விஷம் கொடுத்த ராணுவ வீரர் குடும்பத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை என்னும் பகுதிக்கு அடுத்த வக்கணம்பட்டி சேர்ந்த சிவா என்பவரின் மகள் சத்தியவதனா என்பவருக்கும், ஆண்டியப்பனூரை சேர்ந்த ராணுவ வீரரான மணிவண்ணன் என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றுள்ளது. ராணுவ வீரராக பஞ்சாபில் பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தனது மனைவியையும் பஞ்சாப்புக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி 6 மாத கர்ப்பிணியாக … Read more

OLX -ல் இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது!

OLX -ல் இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது. இன்று பலரும் இணையதளங்களில் வரும் பல போலியான  ஏமாந்து விடுகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் விற்பனையாளர் தளமான OLX இல் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக, எஞ்சினியரிங் படித்த 29 வயது இளைஞர், ஒரு இராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்துள்ளார். இந்த இளைஞரின் வலையில் சிக்கிய மருத்துவர் ஒருவர், ஒரு ஐபோனுக்காக ரூ.1.75 லட்சம் வரை  இழந்துள்ளார். இதனையடுத்து இந்த மருத்துவர் சம்பவம்  குறித்து, போலீசில் புகார் அளித்ததையடுத்து, இந்த … Read more