உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யா திட்டம்.! பிரிட்டன் உளவுத்துறை ‘ரகசிய’ எச்சரிக்கை.!

உக்ரைனின் பக்முட் பகுதியை ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கி இன்னும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் அவ்வப்போது  பதிலடி கொடுத்தாலும், ரஷ்யா அளவுக்கு அவர்களால் போரில் பதிலடி கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தற்போது ரஷ்யாவின் அடுத்த ரகசிய நகர்வு பற்றி பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முட் எனும் நகரை வடக்கு மற்றும் தெற்கில் … Read more

ஐநாவில் ரகசிய வாக்கெடுப்பு விவகாரம்.! ரஷ்யாவுக்கு எதிரான வாக்களித்த இந்தியா.!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்த நிலையில், அதனை எதிர்த்து இந்தியா வெளிப்படையான வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.  உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை … Read more

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை: ஹிட்லரின் ரத்தத்திலும் யூத இனம் கலந்திருக்கலாம்..!

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ், ஹிட்லரின் உடலிலும் யூத இன ரத்தம் கலந்திருக்கலாம் எனபேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. கடந்த அறுபது நாட்களுக்கும் மேலாக உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது ஒரு புதிய சர்ச்சையில் அவரை தள்ளியுள்ளது. ரஷ்யா பல வருடங்களாகவே உக்ரைன் அதிபரான விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆட்சியை குறித்து ஹிட்லரின் ஆட்சியோடு ஒப்பிட்டு பேசி வருகிறது. இந்த நிலையில் … Read more

ஸ்மார்ட்போனால் துப்பாக்கி குண்டிலிருந்து தப்பிய உக்ரைன் இராணுவ வீரர் – வீடியோ உள்ளே..!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ச்சியாக போர் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களால் முடிந்த அளவிற்கு போரை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போர்க்களத்தில் இருந்த உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவரது ஸ்மார்ட் போன் மூலமாக அவர் துப்பாக்கி குண்டு வீச்சிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் … Read more

ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்த இந்தியா!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனில் இருந்து அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. தொடரும் தாக்குதல்  இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த … Read more

“சரணடையுங்கள்” என்று எச்சரித்த ரஷ்யா – மறுத்து விட்ட உக்ரைன்!

கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் பலமுனை தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தொடர் தாக்குதலை ரஷ்ய படைகள் நடத்தி வருகின்றது. உணவுப் பற்றாக்குறை: இதனால்,சுமார் 3,00,000 பேர் அங்கு சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும்,உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில்,மரியபோல் நகரில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவிகள் வெளியிலிருந்து வருவதை ரஷ்ய படைகள் தடுக்கின்றன. சரணடையுங்கள்: இந்நிலையில்,முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரத்தில் உள்ள மக்கள் சரணடைந்தால் … Read more

பயங்கரம்…பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கின்மீது குண்டு வீச்சு – 1000-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன?..!

உக்ரைன் மீது கடந்த சில நாட்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்,முக்கிய நகரங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.அந்த வகையில்,உக்ரைனின் தெற்கு பகுதியான மரியபோல் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இதனையடுத்து,அப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதன்காரணமாக,அப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு: குறிப்பாக குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சூழலில் மரியபோல் நகரில் ரஷ்ய … Read more

முதல் முறையாக இந்தியர்களை வெளியேற்ற உதவிய ரஷ்ய ராணுவம்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் கடந்த 21 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.அதன்படி,கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர். அதே சமயம், இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால்,உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும்,ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின்ன் உயர் அதிகாரி ஒருவர், மார்ச் 3 ஆம் … Read more

தொடரும் தாக்குதல் – உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமல்..!

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையே இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இன்று இரவு 8 மணிமுதல் மார்ச் 17 காலை 7 மணிவரை ஊரடங்கு அமல்படுத்துவதாகவும், குண்டுவீச்சில் இருந்து பாதுகாத்து … Read more

ஆபரேசன் கங்கா:மேலும்,242 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் வருகை!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில்  ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை  அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது. அதே வேளையில்,போர் காரணமாக உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் … Read more