“சரணடையுங்கள்” என்று எச்சரித்த ரஷ்யா – மறுத்து விட்ட உக்ரைன்!

கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் பலமுனை தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தொடர் தாக்குதலை ரஷ்ய படைகள் நடத்தி வருகின்றது. உணவுப் பற்றாக்குறை: இதனால்,சுமார் 3,00,000 பேர் அங்கு சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும்,உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில்,மரியபோல் நகரில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவிகள் வெளியிலிருந்து வருவதை ரஷ்ய படைகள் தடுக்கின்றன. சரணடையுங்கள்: இந்நிலையில்,முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரத்தில் உள்ள மக்கள் சரணடைந்தால் … Read more

பயங்கரம்…பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கின்மீது குண்டு வீச்சு – 1000-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன?..!

உக்ரைன் மீது கடந்த சில நாட்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்,முக்கிய நகரங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.அந்த வகையில்,உக்ரைனின் தெற்கு பகுதியான மரியபோல் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இதனையடுத்து,அப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதன்காரணமாக,அப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு: குறிப்பாக குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சூழலில் மரியபோல் நகரில் ரஷ்ய … Read more

முதல் முறையாக இந்தியர்களை வெளியேற்ற உதவிய ரஷ்ய ராணுவம்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் கடந்த 21 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.அதன்படி,கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர். அதே சமயம், இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால்,உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும்,ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின்ன் உயர் அதிகாரி ஒருவர், மார்ச் 3 ஆம் … Read more

முடிவுக்கு வருகிறதா போர்? – உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள்  முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில்,போர் நிறுத்தம் தொடர்பாக  உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பெலாரசில் நடைபெற்ற முதல் இரண்டு பேச்சு வார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகினது. எனினும்,உக்ரைனில் … Read more

“நான் இரு குழந்தைகளுக்கு தந்தை;ரசாயன ஆயுதங்களை கொண்டு எங்களை தாக்க வாய்ப்பு” -ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதியுதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் உயிரியல் ஆயுதங்களின் கூறுகள் தயாரிக்கப்பட்டதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன என்று  ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது.மேலும்,ரஷ்யா வழியாக இடம்பெயரும் பறவைகளை வைரஸ் சுமக்கப் பயன்படுத்துவதாகவும் உக்ரைன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில்,எந்தவொரு இரசாயன அல்லது பிற பேரழிவு ஆயுதங்களும் தங்கள் நாட்டில் உருவாக்கப்படவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதில் அளித்துள்ளார். மேலும்,இது … Read more

“ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா ஏன் நடுநிலை?” – பிரதமர் மோடி விளக்கம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா மீது மிகப்பெரிய நிறுவனங்கள் பொருளாதார தடையை விதிக்க தொடங்கியுள்ளன. ஆனால்,உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை இந்தியா,சீனா உள்ளிட்ட சில நாடுகள் புறக்கணித்தன.குறிப்பாக, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் இருந்தும் இந்தியா விலகியிருந்தது. இந்நிலையில்,ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் … Read more

நாடு திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!

சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோனை வழங்கும் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்றும் கூறினார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உக்ரைனில் மருத்துவ கல்வி படித்து வரும் மாணவர்களின் எதிர்கால மருத்துவ படிப்பை … Read more

#Breaking:”தலைநகரில் மீண்டும் விமான தாக்குதல்;பதுங்கி கொள்ளுங்கள்” – உக்ரைன் அரசு எச்சரிக்கை!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள்  முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது.இதனையடுத்து,உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் … Read more

“உக்ரைனில் இருந்து என்னை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி” – பாகிஸ்தான் மாணவியின் வைரல் வீடியோ!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனிடையே,ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள்  கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதனால்,அங்கு படிக்க சென்ற வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள்,என அனைவரும் வெளியேறி வருகின்றனர். இதனிடையே,உக்ரைனில் இருந்து அண்டை … Read more

“நேட்டோவுடன் இணைய விருப்பம் இல்லை;புடினுடன் பேசத் தயார்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் அறிவிப்பு!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனிடையே,ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள்  கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில்,நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையும் தனது மனநிலை மாறிவிட்டதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக ஏபிசி … Read more