உக்ரைனின் பொது இடங்களிலிருந்து, ரஷ்ய சின்னங்கள் நீக்கம்.!

உக்ரைன் பொது இடங்களில் இருந்து ரஷ்ய நினைவுச்சின்னங்களை, உக்ரைன் அகற்றி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பத்து மாதங்களாக நடந்து வருகிறது. ரஷ்யா, உக்ரைன் மீது அதன் மின் ஆற்றல் அமைப்புகளின் மீது தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் உக்ரைனின் பல இடங்களில் மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் ரஷ்யாவின் கடைசியான தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக தடுத்து விட்டது. இந்த நிலையில் உக்ரைனின் பொதுஇடங்களில் உள்ள ரஷ்ய நினைவுச்சின்னங்களை, உக்ரைன் மக்கள் அகற்றி வருகின்றனர். மேலும் பல … Read more

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை தயார்படுத்தும் ரஷ்யா- உக்ரைன் தகவல்

உக்ரைனின் கீவ் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாக உக்ரைன் தகவல். உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த  திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 2 லட்சம் புதிய படை வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாகவும் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி எச்சரித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலுக்கு எத்தனை பீரங்கிகள், எவ்வளவு ஆயுதங்கள் தேவை என்று நாங்கள் அனைத்து கணக்கீடுகளையும் செய்துள்ளோம். தற்போதைய நிலை மற்றும் … Read more

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யாவிற்கு பித்து பிடிக்கவில்லை-புதின் 

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யாவிற்கு பித்து பிடிக்கவில்லை என்று புதின் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த தாக்குதலுக்கு, உக்ரைன் மற்றும் அமெரிக்கா உதவியுடன் நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதற்கு பதிலளித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா, முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது, ரஷ்யாவிற்கு இன்னும் அந்த அளவுக்கு பித்து பிடிக்கவில்லை. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து பெரிதாக … Read more

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மழை! இருளில் சூழ்ந்த உக்ரைன்.!

உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து 9 மாதங்களில், ரஷ்யா ஒரேநாளில் 100 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது. ரஷ்யப்படைகளால் 100 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும், அவை பெரும்பாலும் உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பின் மீது குறி வைத்து  ஏவப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது, மேலும் போர் தொடங்கி 9 மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறும்போது, இதன்மூலம் ரஷ்யாவிற்கு என்ன வேண்டும் என்பது தெரிகிறது, 85 ஏவுகணைகள் இதுவரை இங்கே … Read more

உடனே வெளியேறுங்கள்.! உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் ஓர் உத்தரவு.! தூதரகம் அறிவிப்பு.!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்து வருகிறது . ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . உக்ரைன் நாட்டு முக்கிய சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த விவகாரங்களை அடுத்து, உக்ரைனில் இருக்கும் … Read more

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம்.! ரஷ்ய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார்.  ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக தொடர்கிறது. இதில் ஆரம்பம் முதலே ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இடையில் சிறுது மாதம் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், … Read more

ஐநாவில் ரகசிய வாக்கெடுப்பு விவகாரம்.! ரஷ்யாவுக்கு எதிரான வாக்களித்த இந்தியா.!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்த நிலையில், அதனை எதிர்த்து இந்தியா வெளிப்படையான வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.  உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை … Read more

கிரிமியா பாலம் தகர்ப்பு.! மீண்டும் ருத்ர தாண்டவமாடும் ரஷ்யா.! உருக்குலைந்து நிற்கும் உக்ரைன்.!

கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா, 84 ஏவுகணைகளை உக்ரைன் நாட்டின் மீது போட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  கடந்த பிப்ரவரி மாதம் முதல் சுமார் 10 மாதங்களாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீண்டு கொண்டிருக்குறது. சில மாதங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்த இந்த போர் விவகாரம். தற்போது மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா எனும் பகுதியை உக்ரைன் கைப்பற்றியது . பின்னர் அந்த கிரிமியா … Read more

ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பயங்கர பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த 7 மாதமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் க்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுடன், உக்ரைனின் ப்ராந்தியங்களை இணைப்பதற்கான வாக்கெடுப்பு உக்ரைனில் நான்காவது நாளாக நடைபெறுகிறது. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குப்பெட்டிகள் வீடு வீடாக எடுத்துச்செல்லப்பட்டதாக உக்ரைனின், லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் கூறினார். இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தொலைக்காட்சி … Read more

உக்ரைன் வணிக வளாகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா..!

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது. தற்போது வரை போரின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. இதன் காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் பல்வேறு உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைனில் இருக்கும் … Read more