Russia : ராணுவத்தில் வேலை ..2லட்சம் சம்பளம் ..இந்தியர்களை ஏமாற்றி கொலை செய்யும் ரஷ்ய ராணுவம் ..?

Russia Ukraine War : கடந்த வாரம் ரஷ்யாவில் நடைபெற்ற உக்ரைனில் நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவத்திற்காக சண்டையிடும் போது இந்தியாவை சேர்ந்த 23 வயதான ஹெமில் மங்குயா ஆளில்லா விமான தாக்குல் விபத்தில்  மரணமடைந்தார்.  அவர் இறந்த பிறகு அவரது நண்பரான தாஹிர் முகமது இது விபத்து அல்ல, கொலை என்பதை விளக்கி கூறி இருக்கிறார். Read More :- அதிபர் வேட்பாளர் தேர்தல்: மிச்சிகனில் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் வெற்றி..! இந்த சம்பவம் … Read more

உக்ரைனுக்கு 1000 மெட்டல் டிடெக்டர்களை வழங்கும் பிரிட்டன்..!

உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்ற 1000 மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் செயலிழக்கச் செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பாதிப்படைந்த தங்களது சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கும் முயற்சியில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக 1000க்கும் மேற்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் கண்ணி வெடிகளை செயளிக்கச்செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் முயற்சிகளை பாதுகாப்பாக … Read more

உக்ரைன் – ரஷ்யா போரில் அணு ஆயுதம்.? பிரதமர் மோடி, சீன அதிபர் கவலை.!

ரஷ்யா அணுஆயுதங்ளை பயன்படுத்துமோ என்ற கவலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். – சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ்.  ரஷ்யா , உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து 10 மாதங்களை கடந்தும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.  மேலும், தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் போராடுவோம் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருந்தார். இதுகுறித்தும்  அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான – சிஐஏ தலைவர் … Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில், ரஷ்யா பொறுத்திய ராக்கெட் லாஞ்சர்கள்.!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ரஷ்யா, ராக்கெட் ஏவுகணைகளை பொறுத்தியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைன் எல்லையில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவில், உள்ள ஆறு உலைகளில் ஒன்றின் அருகே ரஷ்யப் படைகள் பல ராக்கெட் ஏவுகணைகளை(லாஞ்சர்களை) வைத்துள்ளதாக உக்ரைனின் அணுசக்தி நிறுவனமான எனர்கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்யாவில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யப்படைகள், ராக்கெட் லாஞ்சர்களை அணுமின் நிலையத்தில் வைத்து உக்ரைனுக்கு பயத்தை அதிகரிக்க செய்துள்ளதாக … Read more

போரை நிறுத்த விரும்பினால் புதினுடன் பேசத்தயார்- ஜோ பைடன்.!

உக்ரைன் போரை நிறுத்த புதின் விரும்பினால், அவருடன் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கடந்த 10 மாதங்களாக உக்ரைனில் போரை நடத்தி வரும் ரஷ்யா தற்போது உக்ரைனுடனான போரை நிறுத்தும் வழியை விரும்பினால் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசத்தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 மாதங்களாகி முதன்முறையாக அமெரிக்கா போரை நிறுத்த புதினுடன் பேசுவதாக கூறியிருக்கிறது. செய்தி கூட்டு மாநாட்டில் பங்கேற்ற பைடன் … Read more

உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா .. ! மின்சாதன உபகரணங்களை வாங்க 53 மில்லியன் டாலர் ஒதுக்கீடு..!

ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 53 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் ரஷ்யா உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து தாக்கியது.ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனின் மின்சாரக்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதைத்  தொடர்ந்து உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் சேதமடைந்த மின் கட்டமைப்பை சரி செய்வதற்காக, அமெரிக்கா மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கு 53 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 432 கோடி)  … Read more

ரஷ்யா அடுத்தடுத்த தாக்குதல்.! உக்ரைனில் 10 மில்லியன் மக்கள் மின்சாரமின்றி தவிப்பு.!

ரஷ்யா மேலும் நடத்திய தாக்குதல்களால் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு. உக்ரேனிய எரிவாயு மற்றும் மின்சார உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் உக்ரைனின் மின்சார கட்டடம் தாக்கப்பட்டு, மில்லியன் கணக்கான உக்ரரைன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார். போருக்கு முன் உக்ரைன் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்போது கடுமையாக … Read more

உடனே வெளியேறுங்கள்.! உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் ஓர் உத்தரவு.! தூதரகம் அறிவிப்பு.!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்து வருகிறது . ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . உக்ரைன் நாட்டு முக்கிய சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த விவகாரங்களை அடுத்து, உக்ரைனில் இருக்கும் … Read more