போரை நிறுத்த விரும்பினால் புதினுடன் பேசத்தயார்- ஜோ பைடன்.!

உக்ரைன் போரை நிறுத்த புதின் விரும்பினால், அவருடன் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

கடந்த 10 மாதங்களாக உக்ரைனில் போரை நடத்தி வரும் ரஷ்யா தற்போது உக்ரைனுடனான போரை நிறுத்தும் வழியை விரும்பினால் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசத்தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 மாதங்களாகி முதன்முறையாக அமெரிக்கா போரை நிறுத்த புதினுடன் பேசுவதாக கூறியிருக்கிறது.

செய்தி கூட்டு மாநாட்டில் பங்கேற்ற பைடன் இது குறித்து  கூறியதாவது, போரை நிறுத்தவேண்டும் என்று உண்மையில் ரஷ்ய அதிபர் புதின் விரும்பினால், அவருடன் பேசத்தயார், அதுவும் நேட்டோ(NATO) உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து போரை நிறுத்தும் வழி குறித்து புதினுடன் பேச தயாராக இருப்பதாக கூறினார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், அமெரிக்காவும் நேட்டோவும், உக்ரைன் போரில் நேரடியாக பங்கேற்று வருபவர்கள். ஏனெனில் அவர்கள் உக்ரைனின் கீவ்வுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறார்கள் மற்றும் இராணுவ பயிற்சியையும் அளித்து வருகிறார்கள்.

உக்ரைனின் மின்சார கட்டமைப்பின் மீதான ரஷ்ய தாக்குதல்கள், ரஷ்யர்களைக் காப்பாற்ற செய்த தாக்குதல் என்று கூறினார். போரில் ரஷ்யர்களைக் கொல்ல உக்ரைனுக்கு ஆபத்தான ஆயுதங்களை அனுப்புவதைத் தடுக்க ரஷ்யா, இவ்வாறு மின்கட்டமைப்பு ஆற்றல் வசதிகள் மீது தாக்குதல் நடத்தி முடக்கியது என்று கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment