மியான்மருக்கு எதிரான ஐநாவின் தீர்மானத்தில் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா.!

மியான்மருக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தில் வாக்களிப்பதில் இந்தியா புறக்கணித்துள்ளது. மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சியைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) மியான்மருக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதில் வாக்கெடுப்பு நடத்தியது. மியான்மரில் ராணுவ ஆட்சியின் மூலம் மரணதண்டனை, அதிகார துஷ்பிரயோகங்களுக்காக நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் இருந்து இந்தியா புறக்கணித்துள்ளது. இந்தியா உட்பட ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மியான்மருக்கு எதிரான இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. மேலும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா தவிர … Read more

ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்த இந்தியா!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரேனில் இருந்து அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. தொடரும் தாக்குதல்  இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த … Read more

இன்று ஐநா சபைக்கு தலைமை தாங்கும் முதல் இந்திய பிரதமர் மோடி – 10 முக்கிய விபரங்கள்…!

ஐநா சபை விவாதத்திற்கு தலைமை தாங்கும் முதல் இந்தியப் பிரதமராக பிரதமர் மோடி உள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைவராக முதல் முறையாக ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது.ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி, பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, மாதம் ஒரு நாடு இருக்கும்.அதன்படி,தற்போது இந்தியா பொறுப்பேற்றுள்ளது. பிரதமர் தலைமை: இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) கடல் பாதுகாப்பு … Read more

ஆப்கான் போர் விவகாரம்: அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட தாலிபான்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போருக்கு தீர்வு காண நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தற்போது கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த தலிபான்களின் ஆட்சியை அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மொத்த நாட்டின் எல்லையில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும் … Read more