ஜம்முவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் நாளை மதுரை கொண்டுவரப்படுகிறது.!

ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை மதுரை புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது. 

ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான  இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு பலரும்  தங்கள் வீரவணக்கத்தை, இரங்கல் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணுவ வீரரின் மறைவுக்கு இரங்களும், ராணுவ வீரரின் வீட்டிற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்தார்.

இந்நிலையில், ஜம்முவில் உயிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நாளை அவரது சொந்த ஊரான மதுரை புதுப்பட்டிக்கு கொண்டுவரப்பட உள்ளது என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment