போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை..!

73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் 73-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அணிந்திருந்த தொப்பியை போன்ற தொப்பியை அணிந்தபடி பிரதமர் மோதி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்ற்றுள்ளார்.

இன்று தேர்வு முடிவுகள் வெளியீடு – சென்னைப் பல்.கழகம் அறிவிப்பு

இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு http://ideunom.ac.in இணையதளத்தில் வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை தேர்வு முடிவுகள்- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

இளங்கலை, முதுகலை, முதுநிலை படிப்புகளுக்கு  நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு இளங்கலை, முதுகலை, முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு http://ideunom.ac.in இணையதளத்தில் வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை- துணை நிலை ஆளுநர் அறிவிப்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு. புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் என என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30 -ம் தேதி மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

#BREAKING: நாளை சுகாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை..!

நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை … Read more

#BREAKING: ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விசாரணை குழு – முதல்வர்..!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயர் நகரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால் தி.நகரில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இது அதிமுக செய்த கோளாறு எனவே ஸ்மார்ட் … Read more

பிரதமர் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம்..!

பிரதமர் தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

#BREAKING: திருச்சி என்.ஐ.டியில் 10 மாணவர்களுக்கு கொரோனா..!

திருச்சி என்.ஐ.டியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர் சென்று திரும்பிய 577 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சி என்.ஐ.டியில் கொரோனா உறுதியானவர்களில் பலர் வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்கள், மேலும் ஓமைக்ரான் தொற்றா..? என்பதை கண்டறிய மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை. சென்னை, தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். இந்த கூட்டத்தின் போது  சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.