நீரவ் மோடியின் 147 கோடி சொத்தை முடக்கியது அமுலாக்கத்துறை…!!

பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் வைத்து நிரவ் மோடி 12,000 கோடி மோசடி செய்ததாக அமுலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மும்பையில் உள்ள நீரவ் மோடியின் 147 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மலக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்போது நீரவ் மோடி  … Read more

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 10 தீவிரவாதிகள் கைது..!!

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் 10 பேரை தேசிய விசாரணை முகமையை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள நகரங்களை குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைபினர் தாக்குதல் நடத்த இருப்பதாக தேசிய விசாரணை முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டெல்லியின் சீலாம்பூர், உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது 10 பேரை கைது செய்த அதிகாரிகள், அவர்கள் பதுக்கி வைத்திருந்த வெடி … Read more

"இறந்த சிறுவனை பிழைக்க வைக்கிறேன்" 2 டாக்டர்கள் கைது..!!

இறந்த சிறுவனை பிழைக்க வைப்பதாக கூறிய ஆயுர்வேத டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோண்டியா மாவட்டம் கோரேகாவ் தாலுகாவில் உள்ள கோதி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனை கடந்த ஞாயிற்றுக்கிழமை பாம்பு கடித்தது. இதையடுத்து அச்சிறுவன் அருகில் உள்ள கங்காபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவனது உடல் கிராமத்திற்கு எடுத்து … Read more

லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் பகுதியில் வட்டாட்சியர் ரேணுகா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். லஞ்சம் பெற்ற புகாரில் வட்டாட்சியரை கைது செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது. DINASUVADU 

“ரூ 18,00,00,000 மோசடி” போலி ஆவணம் தயாரித்த தம்பதி கைது..!!

திருப்பூர்,திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் காவிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (59). பனியன் ஏற்றுமதி நிறுவனம் மற்றும் ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள வங்கி கிளையில் கணக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ராமசாமி வங்கிக்கு சென்ற போது அவரது கணக்கில் ரூ. 3 கோடியே … Read more

“காதலியுடன் சேர்ந்து 100 பெண்கள் கற்பழிப்பு”

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31). இவர்கள் இருவரும் மதுப்பிரியர்கள். பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். அங்கு வரும் அழகிய பெண்களை பேச்சின் மூலம் வசியம் செய்து அவர்களுடன் ரோபிசியஸ் நட்புறவை ஏற்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை வழங்கி கற்பழித்து வந்தார். இதற்கு அவரது … Read more

ரூபாய் 1,43,00000 பழைய நோட்டுக்கள் பறிமுதல்..!!

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1.43 கோடி ரூபாய் பணத்தை அதை வைத்திருந்த மூன்று நபர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாக ஹரியாணா காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹாரீஷ் பர்த்வாஜ் தெரிவிக்கையில், ”ஹரியாணா மாநிலத்தில் ஹிசார் நகரத்தின் நவ்தீப் காலனியில் போலீஸார் நேற்று இரவு ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது பழைய ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாய் சிக்கின. இது தவிர இன்று புதுடெல்லி, ரோடக் ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. புதுடெல்லி … Read more

பசுமைவழி சலை விவகாரத்தில் அடக்குமுறையை கையாளுகிறதா அரசு..??யோகேந்திர யாதவ் கைது செய்து விடுதலை …!!!

எட்டு வழிச் சாலை பிரச்னைக்காக தமிழக விவசாயிகளைக் காண வந்த யோகேந்திர யாதவை, தமிழக காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக்  கைது செய்து விடுவித்தனர். யார் இந்த யோகேந்திர யாதவ் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முன்னர் இருந்தே பல காலமாக மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக செயல்பட்டு வருபவர். டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மூளையாகச் செயல்பட்டவர். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ‘சுவராஜ் … Read more

திருட்டு வீசிடி விற்றவர் கைது..!!

நாகர்கோவிலில் புதுப்பட சிடிகள் விற்றவர் கைது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் சிடி களை விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் இயங்கி வரும் ஒரு கடையில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் சிடிகள் மற்றும் ஆபாசபடங்களின் சிடி விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வடசேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரி தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தியர்.அப்போது அங்கே  புதுப்படம் மற்றும் ஆபாசபடங்களின் சிடிகள் இருந்தது , விற்பனையானது  உறுதிசெய்யப்பட்ட்து . … Read more

ஓட்டப்பிடராம் புதியம்புத்தூரில் திமுகவினர் கைது….

நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர். உத்திரபிரதேசம் என தொடக்கி 6 மாநிலங்கள் வழியாக கேரளா கடந்து தமிழக எல்லைக்குள் வந்தது. ரதயாத்திரை அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்ய பட்ட வேளையில் சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகள் கடும் புயலை கிளப்பினார்.. திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு செய்து மறியல் போராட்டம் செய்தனர்.திமுக செயல் தலைவர் முக. … Read more