லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் பகுதியில் வட்டாட்சியர் ரேணுகா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். லஞ்சம் பெற்ற புகாரில் வட்டாட்சியரை கைது செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றது. DINASUVADU 

நாய்க்கு கல்லறை கட்டிய பெண் தாசில்தார்!!

மத்திய பிரதேசத்தில், உயிரிழந்த தனது வளர்ப்பு நாய்க்கு அரசு நிலத்தில் கல்லறை கட்டிய பெண் தாசில்தாரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் Sidhi மாவட்டத்தை சேர்ந்த அமிதா சிங்கின் வளர்ப்பு நாய், அண்மையில் இறந்தது. இதையடுத்து அங்குள்ள அரசு நிலத்தில், அந்த நாய்க்கு அமிதா கல்லறை கட்டினார். எனினும், விதிமீறி அரசு நிலத்தை தாசில்தாரே ஆக்கிரமிக்கலாமா என்று சிலர் விமர்சனத்தை முன்வைத்தனர். அதற்கு பராமரிப்பு இன்றி இருந்த இடத்தில் கல்லறை கட்டி தற்போது தான் … Read more