திருட்டு வீசிடி விற்றவர் கைது..!!

நாகர்கோவிலில் புதுப்பட சிடிகள் விற்றவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் சிடி களை விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் இயங்கி வரும் ஒரு கடையில் சமீபத்தில் வெளியான புதுப்படங்களின் சிடிகள் மற்றும் ஆபாசபடங்களின் சிடி விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வடசேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தகுமாரி தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தியர்.அப்போது அங்கே  புதுப்படம் மற்றும் ஆபாசபடங்களின் சிடிகள் இருந்தது , விற்பனையானது  உறுதிசெய்யப்பட்ட்து .
அதை தொடர்ந்து போலீஸ் அனைத்து சிடிக்களையும் பறிமுதல் செய்து வழக்குபதிந்து  சிவா (30) என்பவரை கைது செய்தனர்.மேலும் கடையின்  போலீசார் கடையின் உரிமையாளர் துரைசிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்…
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment