சாலைப் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் - தமிழக அரசு புதிய திட்டம்!
தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம்.
தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போக்குவரத்து காவலர்கள் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். அதன்படி, எலக்ரானிக் என்போர்ஸ்மென்ட் கருவியை பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
[caption id="attachment_637482" align="aligncenter" width="1080"] [Image Source : Twitter/@Nandhini_Twits][/caption]
What's Your Reaction?