கட்சி வாய்ப்பு கொடுத்தால் எந்த தொகுதியிலும் நிற்பேன்: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி

Feb 11, 2024 - 13:07
 0  0
கட்சி வாய்ப்பு கொடுத்தால் எந்த தொகுதியிலும் நிற்பேன்: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பேட்டி

கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தலைமை வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் நிற்பேன் எனவும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் கார்த்தி சிதம்பரம் பேசும் போது, “சிவங்கையில் போட்டியிட திமுகவினரும், காங்கிரஸ் கட்சியிலேயே சிலரும் முயல்வது குறித்து கேட்கிறீர்கள், ஜனநாயக நாட்டில் இது போன்ற போட்டிகள் இயல்பு தான், உயிரோட்டமான காங்கிரஸ் கட்சியில் இதுபோல யாரும் தங்களுக்கான வாய்ப்பைக் கேட்பதில் தவறு இல்லை.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லவே இல்லை – எடப்பாடி பழனிசாமி..! நான் கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன், கட்சி சீட் கொடுத்தால் தேர்தலில் எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் நிற்பேன், நான் போட்டியிடுவதா வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். என்னை பொருத்தவரை எம்.பி பதவிக்குரிய பொறுப்புகளை முழுமையாக பயன்படுத்தி பணி செய்திருக்கிறேன், 6 சட்டசபை தொகுதிக்கும் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதோடு மக்களவையிலும் அரசியல் சார்ந்து பேசியிருக்கிறேன்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow