ஈரோடு கிழக்கு இடைதேர்தல் - 12 பேர் ஒரு வாக்கு கூட பெறவில்லை..!

Mar 2, 2023 - 06:28
 0  1

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 சுற்றுகளின் அதிகாரபூர்வ முடிவில், 77 பேரில், 12 பேர் ஒரு வாக்குகள் கூட பெறவில்லை

கடந்த மாதம் 27-ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.

அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையில் 3 சுற்றுகள் நிறைவடைந்து, 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. 3 சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 2 சுற்றுகளின் அதிகாரபூர்வ முடிவில், 77 பேரில், 12 பேர் ஒரு வாக்குகள் கூட பெறவில்லை கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow