விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும்..! - அமைச்சர் அன்பில் மகேஷ்

May 26, 2023 - 06:55
 0  1
விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும்..! - அமைச்சர் அன்பில் மகேஷ்

விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. 

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை காலத்தை ஒட்டி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும் என்றும், அடுத்தாண்டு 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow