தோல்வி முகம்.! வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினர் அதிமுக வேட்பாளர் தென்னரசு.!

Mar 2, 2023 - 06:52
 0  1

தொடர்ந்து இறங்கு முகத்தில் இருப்பதால் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி உடன் காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்கிய இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

25,000 வாக்குகள் வித்தியாசம் : தற்போது 5 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துளளது. இதில், இவிகேஎஸ்.இளங்கோவன் 39,855 வாக்குகளும், அதிமுகவ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளையும் பெற்றுள்ளனர். சுமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார் .

பணநாயகம் : தொடர்ந்து தோல்வி முகத்தில் இருந்ததால், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறும் போது செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்கையில், இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றது. பணநாயகம் வென்றது என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow