விபத்து...! 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்...4 பேர் பலி...16 பேர் படுகாயம்.!!

Apr 23, 2023 - 05:23
 0  1

கேரள மாநிலம், இடுக்கி அருகே பூம்பாறை தொண்டிமலை பகுதியில் கட்டுபாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 

தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த 21 பேரை ஏற்றிச் சென்ற வேன்  தொண்டிமலையில் பூப்பாறை அருகே பள்ளத்தில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். நேற்று மாலை 6.45 மணியளவில் மூணாறில் உள்ள லக்ஷ்மி தோட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போது இந்த விபத்து நடைபெற்றது.

கேரள மாநிலம் பூப்பாறை அருகே போடிமெட்டு மலைச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், தோண்டிமலை – தலக்குளம் இடையே உள்ள இரைச்சல் பாலம் அருகே வளைவில் பாதை தெரியாமல் நேராக பாறையில் மோதி 300 அடி பள்ளத்தில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்து ஏலத் தோட்டத்திற்குள் விழுந்தது.

இந்த விபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பெருமாள் (59), வள்ளியம்மா (70), சுதா (20) மற்றும் சுசீந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வேன் கவிழ்ந்தது 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow